For Daily Alerts
Just In
கண்ணதாசனை காணுவோம்
தத்துவம்
போனால் போகட்டும் போடா!
போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்
ஜனனம் என்பது வரவாகும்; அதில்
மரணம் என்பது செலவாகும்.
போனால் போகட்டும் போடா
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதானேலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது, இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது; அந்த
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா
Comments
Story first published: Sunday, October 12, 2008, 20:49 [IST]