துபாயில் தேரிழந்தூர் ஜமாஅத் கல்விக் கருத்தரங்கம்
துபாய்: துபாயில் தேரிழந்தூர் முஸ்லிம் ஜமாஅத், அர்ரஹீமிய்யா கல்வி அறக்கட்டளையின் மனிதவள மேம்பாட்டு ஆராய்ச்சியகம் ஆகியவை இணைந்து கல்விக் கருத்தரங்கை நடத்துகின்றன.
02.04.2009 வியாழக்கிழமை மாலை 8.30 மணியளவில் அஸ்கான் டி பிளாக்கில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இக்கருத்தரங்கில் தென்ஆற்காடு, ஒருங்கிணைந்த தஞ்சை ( நாகை, தஞ்சை, திருவாரூர்), காரைக்கால் மாவட்ட முஸ்லிம் ஜமாஅத்தார்கள் ஒருங்கிணைந்து கல்விப் பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனையும் நடைபெற இருக்கிறது.
துபாய் ஸ்கை சீ குரூப் இயக்குநர் சி.த.அப்துல் காதர் தலைமை தாங்குகிறார். இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா சிறப்புப் பேருரை நிகழ்த்துகிறார்.
இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம் உயர் தொழில்நுட்ப கல்லூரியினை ஏற்படுத்துவது குறித்தாகும்.
இதற்கான ஏற்பாடுகளை தேரிழந்தூர் தாஜுத்தீன் (050 5429422) ஏற்பாடு செய்து வருகிறார்.
மேலும் விவரம் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்:
[email protected] / [email protected]