நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 1100 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்ஸி தேர்வு!
சென்னை: நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 21 பதவிகளுக்கு 1100 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் 5.11.2009 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அங்கீகரித்துள்ள தபால் அலுவலகங்களில் பெறலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை தபால் அலுவலகங்களில் ரூ 30 செலுத்திப் பெற்றுக் கொள்ளுங்கள்.
தேர்வுக் கட்டணம் ரூ.100. இதையும் தபால் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். ஆதி திராவிடர் / பழங்குடியினர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ பிற்படுத்தப்பட்டோர் / முன்னாள் ராணுவத்தினர் / கைம்பெண்கள் / ஊனமுற்றோருக்கு முழுமையான கட்டண விலக்குண்டு.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 30 மாலை 5.45 மணி.
மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in பார்க்கவும்.