தினத்தந்தி நாளிதழின் வரலாற்றுச் சுவடுகள் நூல்-கருணாநிதி வெளியிட்டார்
சென்னை: தினத்தந்தி நாளிதழின் வரலாற்றுச் சுவடுகள் தொடர் நூலாக வெளியாகியுள்ளது. இதை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.
கடந்த 2003ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி முதல் வரலாற்றுச் சுவடுகள் என்ற தொடரை தினத்தந்தி வெளியிட ஆரம்பித்தது. இதை தற்போது நூலாக்கி வெளியிட்டுள்ளனர்.
800 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். முதல் பிரதியை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமி பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதிதத்ன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலில் ரூ. 375 என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் கருணாநிதி நூலை ரூ. 300க்கு விற்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து நூல் விலை ரூ. 300 ஆக குறைக்கப்பட்டது.