For Quick Alerts
For Daily Alerts
Just In
துபாய் ஒயிட் போர்டு ஹோட்டலில் அர்ரஹ்மான் பள்ளி தாளாளர் பேச்சு
துபாய்: மதுக்கூரில் உள்ள அர்ரஹ்மான் துவக்கப்பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக்குவது குறித்து பள்ளியின் தாளாளர் என். எம்.எஸ். அப்துல் காசிம் அவர்கள் வரும் 15-ம் தேதி தூபாயில் விளக்கவுரையாற்றுகிறார்.மதுக்கூரில் அர்ரஹ்மான் துவக்கப்பள்ளி உள்ளது. இதை உயர் நிலைப்பள்ளியாக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று உயர் நிலைப்பள்ளியாக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த நிகழ்ச்சி துபாயில் உள்ள ஒயிட் போர்டு ஹோட்டலில் வரும் 15-ம் தேதி மாலை 5.30 மணி அளவில் நடக்கிறது. இதில் பள்ளியின் தாளாளரும், கல்விக் குழு உறுப்பினருமான என். எம்.எஸ். அப்துல் காசிம் அவர்கள் தொடங்கவிருக்கும் உயர் நிலைப்பள்ளியின் செயல் விளக்கங்கள் குறித்து உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு துபாய் வாழ் மதுக்கூர் மக்கள் அழைக்கப்படுகின்றனர்.
இது குறித்து மேலும் தகவல் அறிய அப்துல் காசிம் அவர்களை 055-4577660 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Comments
English summary
Madukkur Ar Rahman primary and nursery school is going to be a higher secondary school soon. School correspondent NMS. Abdul Kasim is going to give a briefing about this new plan in Dubai White Ford hotel on july 15 at 5.30pm. People can contact him at 055-4577660 to know more details.
Story first published: Wednesday, July 13, 2011, 18:01 [IST]