For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழின் ‘பூ’, ‘கணிணி’ சிறப்பிதழ்கள் வெளியீடும், கவியரங்கமும்

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் இல‌க்கிய‌ கூட்ட‌ம் நாளை(13ம் தேதி) காலை 09.30 மணிக்கு துபாய் கராமாவில் உள்ள சிவ்ஸ்டார் உணவகத்தின் முதல் தளத்தில் நடக்கிறது. அப்போது தமிழ்த்தேர் வெளியீட்டுச் சிறப்பு இதழ்களாக ‘பூ’ மற்றும் ‘கணிணி’ ஆகிய இதழ்கள் வெளியிடப்படவிருக்கின்றன என‌ அமைப்பின் ஆலோச‌க‌ர் காவிரிமைந்த‌ன் தெரிவித்துள்ளார்.

இது தவிர ‘பூ’ என்கிற தலைப்பில் செல்வி நிவேதிதா ஆனந்தன் தலைமையில் கவியரங்கம் நடக்கிறது.

ஈடிஏ எம் அன்ட் இ பிரிவு செயல் இயக்குனர் அன்வர் பாஷா ம‌ற்றும் ப‌ன்னூலாசிரிய‌ர் க‌விஞ‌ர் ஏம்பல் தஜம்முல் முகம்மது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிக்க‌ இருக்கின்றனர்.

கவிதை ப‌டைக்க‌ விரும்பும் படைப்பாளிகள் மற்றும் இல‌க்கிய‌ ஆர்வ‌ல‌ர்கள் ‌நிகழ்ச்சியில் ப‌ங்கேற்றுச் சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் 055 5993120 / 050 4226752 மற்றும் 050 5646267 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

English summary
Vaanalai Valar Tamil's literary meet will be held at Karama Sivestar Bhavan restaurant on april 13. Two magazines namely 'Poo' and 'Kanini' will be realeased. For more details call 055 5993120 / 050 4226752 and 050 5646267
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X