குவைத்தில் நடந்த இந்தியன் சோஷியல் ஃபோரம் கிளை அறிமுக விழா
குவைத்: குவைத்தில் கடந்த 15-5-2015 அன்று இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் கிளைகள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மிர்காப்பில் உள்ள தஞ்சை ஹோட்டலிலும் அபுஹலிபா ஆலிவ் ஹாலிலும் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி மாலை 5.00 மணிக்கு இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தமிழ் பிரிவு துணை தலைவர் இப்ராஹிம் அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் அம்ஜத் அலி அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார். அவர் எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்குழுவில் புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தமிழ் பிரிவு பொதுச் செயலாளர் சிக்கந்தர் பாஷா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர் ஃபோரத்தின் கிளை நிர்வாகிகளை ஃபோரத்தின் தமிழ் பிரிவு செயலாளர் பொறியாளர் முஹம்மது அபூபக்கர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். சிட்டி மண்டல தலைவர் அப்துர் ரஹ்மான், செயலாளர் சாதிக், அப்பாசியா கிளை தலைவர் மன்சூர், செயலாளர் அப்துல் பாஷித், மிர்காப் கிளை தலைவர் அப்பாஸ், செயலாளர் சுல்தான், ஹவல்லி கிளை தலைவர் ஹசன், செயலாளர் அன்வர் பாஷா, ஜஹ்ரா கிளை தலைவர் சபருல்லாஹ், செயலாளர் பைசுல் அன்சாரி, பர்வானியா கிளை தலைவர் பைசல், செயலாளர் முஹம்மது ஜலீல் ஆகியோர் அறிமுகப்படுத்தி வைத்தனர்.
இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தமிழ் பிரிவு செயற்குழு உறுப்பினர் சாதிக் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஃபோரத்தின் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.