காரைக்குடியில் நடக்கும் கம்பன் கழக கூட்டம்: மறக்காம வந்துடுங்க
காரைக்குடி: கம்பன் கழகத்தின் மாதாந்திர கூட்டம் ஜூன் மாதம் 4ம் தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது.
கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளக்ர்கும் ஜுன் மாதக் கூட்டம் 4-6-2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு காரைக்குடி கல்லுக்கட்டி மேற்குகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
திரு. கம்பன் அடிசூடி வரவேற்புரையாற்றுகிறார். முனைவர் திருமதி எஸ். சுஜாதா அவர்கள் உடையவரும் உடையாரும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். வானம் சிரித்தது என்ற தலைப்பில் நகைச்சுவைத் தென்றல் திரு. இரெ. சண்முகவடிவேல் சிறப்புரையாற்றுகிறார்.
திரு. மா. சிதம்பரம் நன்றியுரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கம்பன் கழகத்தார் கேட்டுக் கொண்டுள்ளனர். நிகழ்ச்சியை நடத்த பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ், திரு. அரு.வே மாணிக்கவேலு செட்டியார், சரசுவதி ஆச்சி தம்பதியர் உதவி செய்துள்ளனர்.