For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர்வாடி சந்தனக்கூட்டையொட்டி துபாயில் நடந்த மௌலித் மஜ்லிஸ்

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: ஏர்வாடி தர்கா சந்தனக்கூட்டையொட்டி துபாயில் மௌலித் மஜ்லிஸ் நடைபெற்றது.

ஏர்வாடி பாதுஷா சுல்தான் ஸய்யித் இப்ராஹிம் ஷஹீத் வலியுல்லாஹ் 840வது உரூஸ் இன்று இரவு ஏர்வாடியில் நடக்கின்றது. அதையொட்டி துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை ஏற்பாட்டில் மூன்று நாள் தொடர் மௌலித் ஷரீஃப் கோட்டைப் பள்ளி என்று அறியப்படும் ஜரூனி மஸ்ஜிதில் நடைபெற்றது.

நேற்று மௌலித் ஷரீஃப் நிறைவு நாள் நிகழ்ச்சியும், யாஸீன் ஓதி ஈஸால் ஸவாஃப் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் ஏராளமான மக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Mouldi Majlis held in Dubai

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழக்கரை ஒஃபூர் மற்றும் மஹ்ரூஃப் அறிவுறுத்தலின் பேரில் ஜலால், கீழக்கரை ஹமீது ரஹ்மான், திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன், ஷாஹுல் ஹமீது மற்றும் குழுவினர் செய்திருந்தனர். சீரணி எனப்படும் நார்ஷா, கீழக்கரை அபுதாஹிர் ஃபைஜி மற்றும் ஷார்ஜா பிஸ்மி அப்துல் ரஸாக் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியின் இறுதியில் உலக முஸ்லிம்களின் ஈருலக வாழ்வின் ஏற்றத்திற்கு பிரார்த்தனை செய்யப்பட்டது.

English summary
Moulid Majlis was held in Dubai ahead of Santhanakoodu in Erwadi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X