27ம் தேதி குவைத்தில் சமூக நல்லிணக்க சங்கமம்: அரபு மண்ணில் மீண்டும் ஓர் தமிழ்க்கூடல்
குவைத்: வரும் 27ம் தேதி குவைத்தில் சமூக நல்லிணக்க சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கே-டிக் எனப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் சமூக நல்லிணக்க சங்கமம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. வரும் 27ம் தேதி நடக்கும் இந்த நிகழ்ச்சி காலை 11.50 மணிக்கு துவங்குகிறது.
கே-டிக் தமிழ் குத்பா பள்ளிவாசலில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு கே-டிக் தலைவர் மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா தலைமை தாங்குகிறார். கே-டிக் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் ஜும்ஆ பேருரை நிகழ்த்துகிறார்.
மாலை 4 மணிக்கு குவைத்தில் உள்ள சுல்தான் சென்டரில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. அந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அக்கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுப், கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளுர் ஷாநவாஸ், மாநில கருத்தியல் பரப்புச் செயலாளர் சைதை எஸ்.எஸ். பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.