For Daily Alerts
Just In
ஒரு மழை நாளில்
-ஆகர்ஷிணி
அது ஒரு
பருவமழைக் காலம் ...
முன் தினம் பெய்த மழையில்...
தெருவெல்லாம் தேங்கிய நீர் ...
இன்றோ எனக்கு இன்டர்வியூ
போட்டுக்கொள்ள நேற்றே பொறுமையாய் இஸ்திரி போட்ட
சட்டை பேண்ட்
உடலில் ஏறிய உடையுடன்
ஷூ சாக்ஸ் சகிதமாய்
முன்னெச்சரிக்கையுடன்
ஒரு மணி நேரம் முன்னதாகவே கிளம்பி
தண்ணீரில்லாத திட்டுக்களாய் தேர்ந்தெடுத்து
அடிமேல் அடி வைத்து
கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி
பேருந்து நிலையம் வரை வந்து..
அப்பாடா தப்பித்தாயடா... பலே வெள்ளையத்தேவா!
சேறு படாமல் தப்பிய செருக்கில் என் முகம்
"சலக்"
எங்கிருந்தோ வந்த மகிழுந்து
தெரு நீரை என் மேல் வாரியடித்தபடி!
மகிழ்ச்சி!!
Comments
English summary
This is a poem from our reader on Rain and rainy season.