For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறு தேர்தலை சந்திக்க வாருங்கள்.. பார்த்திபன் பரபர கவிதை

மறு தேர்தலை சந்திக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் முன்வர வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் கவிதை மூலம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் - இயக்குநர் பார்த்திபன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று விட்டு அது குறித்து ஒரு கவிதையை தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். அந்தக் கவிதை:

Parthiban calls ADMK MLAs to face election

முதன்முறையாக ... மறைந்த
முதல்வர் சமாதிக்கு சென்றேன்.
தியானிக்க அல்ல... ஜீரணிக்க !
மரணத்தின் மர்மம்,
மூன்ரெழுத்துக்காரரின் 75 நாள்
மௌனத்தின் மாமர்மம்,
அரசியல் அதர்மங்கள்,
ரிசார்ட்டில் Mla-க்கள்,
ரிமோட்டாய் கோடிகள்,
நடப்பவை நடந்தவை....
விளங்காமல் கலங்கரை
விளக்கத்திலிருந்து நடந்து
சென்றேன். கட்சிகளின்
கல்மிஷங்கள் இல்லாத
Mgr-ன் விசுவாசிகள்,
அதிமுக தொண்டர்கள்,
அறியா பொதுஜனங்கள்
அணையா தீபங்களாய்
அங்கே ஒளியூட்டல் !
அம்மா'என்றழைக்கப்பட்டவரின்
ஆன்மா என்ன நினைக்கும் ?
எனக்கும் அவருக்குமான சில
சந்திப்புகளும் சம்பாஷைனைகளும்
வந்து போயின நினைவில்!
நம்பிக்கை துரோகமும்
துரோகிகளின் நம்பிக்கையும்
எதுவுமே சகிக்கல!
திருமதி சசிகலாவோ
திருமிகு OPS-ஸோ
ஆட்சியமைப்பது
சட்ட பூர்வமேயாகையால்
சட்டு புட்டுன்னு
சட்டசபைக்கு வந்து
மக்கள் பணி பாருங்கள்!

எம்மக்கள் திருந்திவிட்டார்கள்!!!

மறுதேர்தலை சந்திக்க வாருங்கள் !

நோட்டுக்காக அல்ல
நாட்டுக்காகவே ஓட்டு!

English summary
Actor- Director Parthiban has asked the hiding ADMK MLAs to come out and face the election for the sake of people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X