இன்றுமுதல் ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ... புதிய க்ரைம் தொடர்கதை!
க்ரைம் கதை மன்னன் என தமிழ் வாசகர்களால் புகழப்படும் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு புதிய அறிமுகம் தேவையில்லை. ஒன்இந்தியாவில் ஏற்கெனவே நான் முகம் பார்த்த கண்ணாடிகள் அனுபவத் தொடரை எழுதியவர்.
இப்போது முதல் முறையாக நமது இணையதளத்துக்காக புதிய க்ரைம் தொடர்கதையை எழுதுகிறார். தீபாவளி ஸ்பெஷலாக இன்றுமுதல் ஆரம்பமாகும் இந்தப் புதிய தொடருக்கு 'ஒன் + ஒன் = ஜீரோ' என்ற வித்தியாசமான தலைப்பைச் சூட்டியுள்ளார்.
ராஜேஷ்குமாரின் க்ரைம் கதைகளில் மிகவும் புகழ்பெற்ற பாத்திரங்களான விவேக், ரூபலா மற்றும் விஷ்ணு இந்தத் தொடரில் இடம்பெறுகிறார்கள்.
2500க்கும் மேற்பட்ட நாவல்கள், ஏராளமான சிறுகதைகளைப் படைத்த ராஜேஷ்குமார், இப்போது இணைய தள வாசகர்களின் ரசனைக்கேற்ப புதிய உத்திகள், தனக்கே உரிய விறுவிறுப்பான நடையில் தொடங்கியிருக்கும் இந்த புதிய தொடர் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
முதல் அத்தியாயம் இன்றே தொடங்குகிறது. படித்து மகிழுங்கள்.