50 மில்லியன் டாலர் வங்கி...:
அதைத் தான் நேற்று செய்து காட்டியுள்ளன பிரிக்ஸ் நாடுகள். இந்த 5 நாடுகளும் இணைந்து 50 பில்லியன் டாலரைப் போட்டு ஒரு வங்கியை உருவாக்க ஒப்புக் கொண்டுள்ளன. ஒரு பில்லியன் என்பது சுமார் ரூ. 6,000 கோடி. ஆக, ரூ. 3 லட்சம் கோடியை முதலீடாக வைத்து இந்த வங்கி உருவாக்கப்படவுள்ளது. இந்த முதலீட்டை வருங்காலத்தில் 100 பில்லியன் டாலராக, அதாவது ரூ. 6 லட்சம் கோடியாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளன.
இவ்வளவு பெரிய பண விவகாரம் என்பதால் முதலில் பிரிக்ஸ் நாடுகள் வங்கியை உருவாக்குவதில் வேகம் எதையும் காட்டவில்லை. ஆனால், பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்ட அமெரிக்கா கடந்த ஆண்டு தனது பொருளாதாரத்தை வலுத்தப்படுத்திக் கொள்ளும் திட்டத்தில் ஒரு பகுதியாக தனியார் நிறுவனங்களுக்கு தந்து வந்த அரசு உதவியை நிறுத்தியது.
இதையடுத்து அமெரிக்க அரசின் பங்குகளில் முதலீடு செய்ய உலகளவில் போட்டி கிளம்பியது. மாபெரும் முதலீட்டாளர்கள் இந்தியா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் பங்குச் சந்தைகளில் செய்திருந்த முதலீடுகளை (டாலர்கள் என்று படிக்கவும்) எல்லாம் திரும்ப எடுத்துக் கொண்டு அமெரிக்கா பக்கம் ஓட, இந்தியா, ரஷ்யா, பிரேசில் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன.