நர்ஸிங்கும், பார்மசி படிப்பும் முடிச்சுருக்கீங்களா? – அப்போ இந்த வேலை உங்களுக்காகத்தான்!
சென்னை: தேசிய சுகாதார மற்றும் குடும்ப நலன் அமைச்சகத்தின் கீழ் காலியாக உள்ள குரூப் - சி பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: ஸ்டாப் நர்ஸ் மற்றும் பார்மசிஸ்ட் (அலோபதி)
காலியிடங்கள்: ஸ்டாப் நர்ஸ் - 03
பார்மசிஸ்ட் - 07
பணியிடங்கள்: ஷில்லாங், இம்பால், அகர்தலா
வயது வரம்பு: ஸ்டாப் நர்ஸ் - 20 முதல் 30 வயது வரை
பார்மசிஸ்ட் - 18 முதல் 30 வயது வரை
சம்பள விகிதம்: அடிப்படை ஊதியம் + தர ஊதியமாக ரூபாய் 4,600
அடிப்படை ஊதியம் + தர ஊதியமாக ரூபாய் 2,800
கல்வித் தகுதி: ஸ்டாப் நர்ஸ் - பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தரத்துடன் பொது மருத்துவத்தில் அதிகாரப்பூர்வ பல்கலைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பார்மசிஸ்ட்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தகுதியுடன் பார்மசி படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணியனுபவம்: இரண்டிற்குமே ஒரு வருடம் அல்லது அதற்கு மேலான அனுபவம் பெற்றிருக்கலாம்.
தேர்வு முறை: விண்ணப்பிப்பவர்கள் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஒரு முழு வெள்ளைத் தாளில் சுய விவரங்களுடன், முக்கிய சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11/04/2015
மேலும் விவரங்களுக்கு: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_17139_24_1415b.pdf
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.