நாட்டு வைத்தியர் கவுண்டரிடம் நோயாளி செந்தில்....
செந்தில்: அய்யா.. அய்யா... இருக்கீங்களா
கவுண்டர்: பெக்கர்ஸ் வாய்ஸ் ஒன்லி இப்படித்தான் இருக்கும்.. யாருடா அது?
செந்தில்: அய்யா.. நான் தான்யா...
கவுண்டர்: நீதான்னா.. ஒபாமாவா? டோணியா.. பேர்சொல்லுடா
செந்தில்: இது வைத்தியர் வீடுதானா?
கவுண்டர்: என்ன லோள்மாரித்தானம்.. வைத்தியர் வீட்டுல கொத்தனாரா இருப்பார்... நானே வர்ரேண்டா
அட கப்பைத் தலையனா.. ஏன்டா கெழவி கிழவி செத்துபோச்சா.. இப்படி வந்துருக்க..
செந்தில்: அய்யா.. அது வந்து.. ரொம்ப முடியலைய்யா..
கவுண்டர்: என்னடா செய்யுது.. தெளிவா சொல்லித் தொலைடா
செந்தில்: ரொம்பவும் அசதியா இருக்கே..
கவுண்டர்: இதைத்தான்டா போன வாரம் சொன்ன.. போய் தினமும் பச்சை முட்டை குடிக்கசொன்னனே..
செந்தில்: அந்த பச்சை முட்டையை தேடித்தேடிதான் இப்படி போய்ட்டேன்னே
கவுண்டர்: என்னடா இந்த ஜனநாயக நாட்டுல ஒரு பச்சை முட்டை கிடைக்கலையா..
செந்தில்: ஊர் உலகம் முழுக்க தேடி கடை கடையா ஏறிட்டேன்னே.. பச்சை முட்டை கிடைக்கலை..
கவுண்டர்: என்னடா இது உலக அதிசயமா இருக்கே.. கோழிக் காய்ச்சல் எழவும் கூட இல்லையே.... ஆமா கடையில என்னன்னு கேட்ட
செந்தில்: பச்சை முட்டை இருக்கான்னு கேட்டேன்..
கவுண்டர்: சரி.. கடைக்காரங்க என்ன சொன்னாங்க..
செந்தில்: முட்டை கொடுத்தாங்கன்னே.. ஆனா அது வெள்ளை வெளேர்னு இருக்கு..
(கவுண்டர் புரிந்தவராய்..... கோபத்துடன்)
கவுண்டர்: சரி அடுத்து நீ என்ன சொன்ன...
செந்தில்: எனக்கு பச்சை முட்டைதான் வேணும்னே கேட்டேன் ஒரு பயலும் தரலையேண்ணே...
கவுண்டர்: ஆக நீ கேட்ட பச்சை முட்டை கிடைக்கலை.... அவ்ளோதானா கோமுட்டி வாயா ... இரு வார்றேன்
(முட்டையின் மீது பச்சை பெயிண்ட் எடுத்து அடித்துவிட்டு) இந்தாடா நீ கேட்ட பச்சை முட்டை
செந்தில்: அண்ணே... உங்களுக்கு குசும்பு...வீட்டுல வெச்சுகிட்டேயே அலையவிட்டுட்டீங்களே...
கவுண்டர்: நீ முதல்ல இந்த பச்சைக் கலரு முட்டையை குடி கண்ணா...
செந்தில் முட்டையை உடைத்து வாயில் ஊற்ற.. ஓங்கி ஒரு உதைவிட்ட கவுண்டர்...
ஏண்டா பச்சை முட்டைன்னா என்னான்னு தெரியாத நாயெல்லாம் இந்த உலகத்துலே இருந்தா என்ன செத்தா என்ன? இந்த வைத்தியர் தொழிலே எனக்கு வேண்டாம்டா சாமீ என்று கடையை இழுத்து மூடிட்டு ஓடிப் போகிறார்..