பேசாம, "டக்வொர்த்" முறைப்படி நாங்களே ஜெயிச்சதா சொல்லிருங்க.. வாட்ஸ்அப்பைக் கலக்கும் ஜோக்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் மழை குறுக்கிட்டு நேற்று இடையூறு செய்ததை வைத்து ஒரு ஜோக் வாட்ஸ் ஆப்பில் வலம் வந்து கொண்டுள்ளது.
கிரிக்கெட்டையும், மழையையும் பிரித்துப் பார்க்க முடியாது. முன்பெல்லாம் கிரிக்கெட் போட்டிகளின்போது மழை குறுக்கிட்டால் முடிவுகளில் குழப்பம் ஏற்பட்டது. இதை தீர்க்க வந்ததுதான் "டக்வொர்த் லூயிஸ்" முறை. கிரிக்கெட் தெரிந்தவர்களுக்கு இந்த டக்வொர்த் லூயிஸ் முறையும் நன்றாகவே தெரியும்.
இந்த நிலையில் நேற்று நடந்த சட்டசபைத் தேர்தல், குறுக்கிட்ட மழை ஆகியவற்றை கிரிக்கெட் - டக்வொர்த் லூயிஸ் முறையுடன் இணைத்து ஜோக்கை உருவாக்கி வலம் வர விட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
அந்த ஜோக் இதுதான்...
"இன்று மழை விடாமல் பெய்து கொண்டிருப்பதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி எங்கள் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கவேண்டும் என்று தேர்தல் கமிஷன் அலுவலகத்தை முற்றுகையிட்டு கட்சியினர் ஆர்பாட்டம்"
இது கூட நல்ல ஐடியாவா இருக்குல்ல?