அப்டி என்ன முக்கியமான பார்சல் மேடம்...?
போஸ்ட் ஆபிசிற்கு வந்த பெண் ஒருவர், அங்குள்ள உயரதிகாரியைச் சந்தித்து குற்றச்சாட்டு ஒன்றை முன் வைக்கிறார்.
அப்படி என்ன அவர் கூறினார் தெரியுமா....
என்னாச்சு...?
பெண் : சார், உங்க போஸ்ட்மேன் ரொம்ப மோசம்ங்க....
அதிகாரி : ஏன் மேடம் என்னாச்சு...?
போஸ்ட்மேனின் போஸ்ட்...
பெண் : நேற்று வீடு வரைக்கும் வந்த போஸ்ட்மேன், கதவைத் தட்டி பார்சலைக் கொடுக்காமல் ‘போஸ்ட் ஆபிசில் வந்து பெற்றுக் கொள்ளவும்'னு எங்க வீட்டுக் கதவுல பேப்பர்ல எழுதி ஒட்ட வச்சுட்டு வந்துட்டாரு...
அதிகார் : அப்படியா...
ஏன் கொடுக்கவில்லை...
பெண் : ஆமாம். என் கணவர் எப்போதுமே வீட்டிலேயே தான் இருப்பார். அவரிடம் பார்சலைக் கொடுத்திருக்கலாமே...
அதிகாரி : போஸ்ட்மேன் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் எனத் தெரியவில்லையே....
எனக்கொரு சந்தேகம்....
அதிகாரி : சரி மேடம், இது குறித்து நான் விசாரிக்கிறேன். எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா...?
பெண் : கேளுங்கள்....
முக்கியமான பார்சலா...
அதிகாரி : நீங்களே இவ்வளவு அவசரமாக பார்சலை வாங்க வந்துள்ளீர்களே, இது அவ்வளவு முக்கியமான பார்சலா...?
பெண் : ஆமாம்...
ரொம்பக் கஷ்டம்....
அதிகாரி : அப்படி இதில் என்ன இருக்கிறது என நான் தெரிந்து கொள்ளலாமா....?
பெண் : நிச்சயமாக, இதில் ரிப்பேர் சரி செய்வதற்காக அனுப்பப் பட்ட என் கணவரின் ஹியரிங் எய்ட் இருக்கிறது. இது இல்லாமல் அவர் மிகவும் சிரமப் படுகிறார்...
( இப்போது புரிகிறதா, போஸ்ட் மேன் எவ்வளவு நேரம் கதவு தட்டியிருப்பார் என்று....)