இதுக்கு பதிலா எங்களுக்கு விஷம் கொடுத்து கொன்று இருக்காலாமே!!
ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ள கண்டித்து நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இதனைக் கண்டித்து இணையதளத்தில் நெட்டிசன்கள் ஏராளமான மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.
மக்கள் எதிர்க்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என கூறி வந்த நிலையில் இன்று நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நெடுவாசல் மக்களின் ஐயங்களை தீர்த்தப் பிறகே ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி தொடங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த ஐயங்களை தமிழக அரசு தீர்த்து வைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து நெட்டிசன்கள் ஏராளமான மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர் அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
வீழ்த்திய அரசுகள்
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி: வஞ்சகத்தால் தமிழகத்தை மத்திய மாநில அரசுகள் வீழ்த்தியது என்கிறது இந்த மீம்
மிஸ்டர் பொன்னார்
மிஸ்டர் பொன்னார்.. உங்க வீட்ட என் பேருக்கு மாத்தி ஒரு கையெழுத்து மட்டும் போடுங்க வீட்டெல்லாம் நான் எடுத்துக்க மாட்டே.. வெறும் கையெழுத்துதான் குழப்பம் வேண்டாம்...
சாப்பிட சோறு இல்லாம
சாப்பிட சோறு இல்லாம வேலைய மட்டும் வச்சிக்கிட்டு நாங்க என்ன பண்ண போறோம்..
இலவச சுடுகாடு
ஹைட்ரோ கார்பன்ன என்னும் உன்னதமான திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு இலவச சுடுகாடு கொண்டுவர உள்ளோம், இதன் வாயிலாக அரசாங்க செலவில் இலவசமாக இறந்தவர்களை தகனம் செய்ய உள்ளோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்..
எதை சாப்பிட்டு வாழ்வாங்க?
இந்த மண்ணை மொத்தமா மலடாக்கிட்டா நாளைய சந்ததிங்க எதை விதைச்சு எதை சாப்பிட்டு வாழ்வாங்க?
கொன்று இருக்கலாமே
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி: இதுக்கு பதிலாக எங்களுக்கு விஷம் கொடுத்து கொன்று இருக்காலாமே!!
எப்படி நம்ப முடியும்
இன்னைக்கு தமிழகத்துல ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கொடுத்து இருக்காங்க, நாளைக்கு ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாதுங்கறதுக்கான தடைய நிரந்தரம் ஆக்குனாலும் ஆக்குவாங்க!!