நாய் வால கூட நிமித்திரலாம்.. ஆனால் இந்த அரசியல்வாதிகள் பேச்ச மட்டும் நம்பவே முடியாது
ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இதனை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நெட்டிசன்கள் மீம்ஸ்கள் மூலம் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து செய்து வருகின்றனர்.
தமிழக விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு
நாய் வால கூட நிமித்திரலாம்..
நாய் வால கூட நிமித்திரலாம்.. ஆனால் இந்த அரசியல்வாதிகள் பேச்ச மட்டும் நம்பவே முடியாது..
பொன்னார் மாதிரியும் சொல்லலாம்
அண்ணே பூவை பூவுன்னு சொல்லாம்.. புஷ்பம்னு சொல்லலாம்.. இல்லை திட்டம் நிறைவேற்றம்னு சொல்லலாம்... பொன்னார் மாதிரி புரிந்துணர்வு ஒப்பந்தம்னு சொல்லலாம்...
அங்க இருக்கா மாதிரியே இருக்கு
நாம இப்ப இந்தியாவில் தான் இருக்கிறோம் ஆனால்.. பைத்தியக்கார ஆஸ்பத்திரியில இருக்கர மாதிரியே இருக்கு...
அர்த்தம் புரியுதா?
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மத்திய அரசு: தமிழக மக்கள் மத்திய அரச பார்க்கிற இந்த பார்வைக்கான அர்த்தம் புரியுதா?
முடிச்சிட்டீங்க போல...
போராட்டத்தை தற்காலிகமா ஒத்தி வைக்கிறோம்னு சொல்லி 2 நாள் கூட ஆகல அதுக்குள்ள வேமாக முடிச்சிட்டீங்க போல..