பிளவுப்பட்ட இரு அணிகளை இணைக்கும தீவிர ஆராய்ச்சியில் விஞ்ஞானி தெர்மாகோல் ராசூ..!!
நீர் ஆவியாகாமல் தடுக்க அமைச்சர் செல்லலூர் ராஜு மேற்கொண்ட முயற்சியை நெட்டிசன்கள் கொஞ்சமும் அசராமல் கலாய்த்து வருகின்றனர்.
மதுரை: வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ படு தோல்வியடைந்தத. இதனை கொஞ்சமும் அசராமல் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்
வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகமல் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு ஒரு புதிய பிளானை செயல்படுத்தினார். அதன்படி அணையில் உள்ள நீரின் மீது தெர்மாகோல்கள் கொண்டு மூடப்பட்டது.
ஆனால் இந்த திட்டம் தோல்வியை சந்தித்தது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அதனை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
வடகொரியாவுக்கு அனுப்பப்படும்
போதுமான அளவு செல்லோ டேப் மற்றும் தெர்மாகோல் அட்டைகள் வடகொரியாவுக்கு அனுப்பப்படும் என தமிழக அரசு தகவல்...
ட்ரெண்டே செட் பண்ணிட்டேனா
ஓ... சீனா வரைக்கும் ட்ரெண்டே செட் பண்ணிட்டேனா... அமைச்சர் செல்லூர் ராஜை கலாய்க்கிறது... இந்த மீம்...
முதல்வராக்கவும்..
இவ்வளவு அறிவுள்ள பச்சக்கிளி அமைச்சர் பதவியிலிருப்பது முறையில்லை... எனவே பச்சக்கிளியை முதல்வர் ஆக்கிவிட்டு மேலும் 7,8 அணையை கட்டி விடவும்...
தீவிர ஆராய்ச்சியில்..
பிளவுப்பட்ட இரு அணிகளை இணைக்கும தீவிர ஆராய்ச்சியில் விஞ்ஞானி தெர்மாகோல் ராசூ...