எத்தனை லிங்க் வேணாலும் பிளாக் பண்ணிக்கோ
பாகுபலி-2 படம் இணையதளங்களில் வெளியானது குறித்து பல்வேறு மீம்ஸ்கள் வெளிவந்துள்ளன.
சென்னை: தமிழ் திரைப்படங்கள் வெளிவந்த நாளே தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் அந்த படத்தை உடனடியாக இணையதளத்தில் உலவ விட்டுவிடும். இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பதவியேற்ற நடிகர் விஷால், தமிழ் ராக்கர்ஸ் மீது கடும் கோபத்தில் உள்ளார். மேலும் திருட்டு விசிடியை தடுப்பதற்கும் வழி செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று வெளியாக உள்ள பாகுபலி 2 படம் வெளியாவதற்கு முன்பே இணையதளத்தில் வெளிவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எத்தனை லிங்க் வேணாலும் யூ பிளாக்...
பாகுபலி பார்ட் 2 சட்டவிரோதமாக வெளியானதை அடுத்து அந்த இணையதள லிங்குகள் பிளாக் செய்யப்பட்டன.
திருட்டு விசிடியை ஒழிக்க எத்தனை லிங்க்குகளை பிளாக் செய்தாலும் நான் லிங்க்கை மாத்திகிட்டே இருப்பேன்.
என் தேடி வரான
படம் ரிலீஸ் ஆனா டிக்கெட் வாங்கிட்டு தியேட்டருக்கு வரனும். ஆனால் அவன் நெட்பேக் போட்டுட்டு என்னை தேடி வறான்.
கலெக்ஷன் எகிறிடும்
அட்சய திருதியை அன்று நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அய்யோ இன்னிக்கு கலெக்ஷன் எகிறிடும் போல் உள்ளதாக நகைக் கடை உரிமையாளர்கள் பூரிப்படைகின்றனர்.
பாகுபலி அல்ல
பாகுபலி படம் தமிழ் இணையதளத்தில் வெளியானது.
அடேய் உங்க ஊர்லதான் அது பாகுபலி.எங்க ஊர்ல அது எந்த படமானாலும் தமிழ் ராக்கர்ஸுக்கு பலி.
கட்டப்பா கொன்றாரா?
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கான விடை பாகுபலி 2.
கட்டப்பா பாகுபலியை கொல்லவில்லை. தமிழ் ராக்கர்ஸ்தான் கொன்றனர்.