சிங்கம் வரும்போது ஓநாய்களின் ஓலம் இருக்கத்தான் செய்யும்...!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து மீண்டும் குழப்பி வருவதாக கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.
சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து மீண்டும் குழப்பி வருவதாக கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள். அவர் சட்டென்று ஒரு முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அண்மையில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் தயாராக இருங்கள் போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றார். அரசியலையே அவர் குறிப்பிட்டு பேசுவதாக கூறப்பட்டது.
இருப்பினும் தெளிவான முடிவை அறிவிக்காமலேயே இருந்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடையே பேசிய ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும்போது அறிவிப்பேன் என்றார்.
ரஜினிகாந்த் மீண்டும் மீண்டும் குழப்பி வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றில் சில..
|
சிங்கம் வரும்போது..
நீ வா தலைவா ... சிங்கம் வரும்போது ஓநாய்களின் ஓலம் இருக்கத்தான் செய்யும்... என்கிறார் இந்த நெட்டிசன்
|
என்ன அவசரம்?
என்ன அவசரம்??? இல்ல இப்பொ என்ன அவசரம்னு கேட்கிறென்... இன்னும் டைம் இருக்கு.. 2031 இல் பொருமையா வாங்க!! என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்
|
ஆட்சி நம்ம கையில்..
சீக்கிரம் வா தலைவா... ஆட்சி நம்ம கையில்.. என்கிறார் இந்த நெட்டிசன்.
|
அரசியல் வியாதிங்க
சட்டுபுட்டுனு முடிவு பண்ணி சீக்கிறம் வாங்க சார். இப்ப இருக்குற அரசியல் வியாதிங்க அலம்பல் தாங்க முடியல.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
ஒரு முடிவுக்கு வாங்கய்யா
ஒரு முடிவுக்கு வாங்கயா... என்கிறார் இந்த நெட்டிசன்...