பவர் பாண்டியை பாராட்டும் புலிப்பாண்டி....!
பவர் பாண்டி படத்தில் நடிகர் ராஜ்கிரண் நடிப்பதை பார்த்து கண்கலங்கிவிட்டதாக வைகோ தெரிவித்துள்ளதை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
சென்னை: பவர் பாண்டி படத்தில் நடிகர் ராஜ்கிரண் நடிப்பதை பார்த்து கண்கலங்கிவிட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதனை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
அண்மையில் ராஜ்கிரண், ரேவதி, தனுஷ் நடிப்பில் வெளியானது பவர் பாண்டி திரைப்படம். இதில் நடிகர் ராஜ்கிரணின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் பவர் பாண்டி படத்தில் நடிகர் ராஜ்கிரணின் நடிப்பை பார்த்து கண்கலங்கிவிட்டதாக வைகோ உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். இதனை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்..
|
புலிப்பாண்டி
பவர் பாண்டியை பாராட்டும் புலிப்பாண்டி....! என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்...
|
தமிழகத்தின்..
தமிழகத்தின் அரவிந்த் கெஜ்ரிவால்... என பாராட்டுகிறார் இந்த நெட்டிசன்...
|
மிஞ்சிட்டார்னா..
பர்ஃபார்மன்ஸ்ல நம்மள மிஞ்சிட்டார்னா.... என்கிறார் இந்த நெட்டிசன்...
|
கிளம்பிடுவாறோ..
புல்லட் எடுத்துட்டு கிளம்பிடுவாறோ? என்கிறார் இந்த வலைதளவாசி...