படுகேவலமான பவுலிங்.. ஃபீல்டிங்... இந்திய அணியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!
இந்திய அணியின் பந்துவீச்சு படுகேவலமாக இருந்ததாக விமர்சித்துள்ளனர் நெட்டிசன்கள்.
சென்னை: இந்திய அணியின் பந்துவீச்சு படுகேவலமாக இருந்ததாக விமர்சித்துள்ளனர் நெட்டிசன்கள். இந்திய அணியின் மோசமனா பந்துவீச்சே பாகிஸ்தான் ரன்குவிக்க காரணமாக இருந்ததாகவும் விளாசியுள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன் ட்ராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 338 ரன்களை குவித்துள்ளது.
இந்திய அணியின் ஓவர் கான்பிடன்ட்தான் இதற்கு காரணம் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கூறியுள்ளனர். எக்ஸ்ட்ரா ரன்களையும் இந்திய பந்துவீச்சாளர்கள் அள்ளிக்கொடுத்துள்ளதாகவும் நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.
|
மோசமான பந்துவீச்சு
ஒன்றுமே இல்லாத மோசமான பந்து வீச்சு.. என கோபத்தை வெளிப்படுத்துகிறார் இந்த நெட்டிசன்...
|
கேவலமனா பந்துவீச்சுகளில் ஒன்று..
இந்தியாவின் கேவலமனா பந்துவீச்சுகளில் ஒன்று.. குறிப்பாக அதிக எக்ஸ்ட்ராக்களை அள்ளிக்கொடுத்துள்ளனர் என்கிறார் இந்த நெட்டிசன்..
|
ஓவர் கான்பிடன்ட்
பாகிஸ்தான குறைவாக எடைபோட்டு இந்தியா ஓவர் கான்பிடன்ட்டில் இருந்தது... மோசமான பவுலிங்.. ஃபீல்டிங் என விளாசுகிறார் இந்த நெட்டிசன்..
|
ஆத்மா சாந்தியடையட்டும்
ரன் அவுட்டுகளால் மட்டும் தான் இந்தியாவால் விக்கெட்டுகளை எடுக்க முடியும்.. இந்தியன் பவுலிங்கின் ஆத்மா சாந்தியடையட்டும் என்கிறார் இந்த வலைஞர்..
|
வெற்றியை பறித்துவிடும்
இந்த பவுலிங்கும் கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ்ட்ராஸும் இந்தியாவிடம் இருந்து போட்டியை பறித்துவிடும் ஓவர்கான்ஃபிடன்ட் தான் இங்கு கொண்டுவந்து விட்டுள்ளதாகவும் இந்த நெட்டிசன் கூறுகிறார்..
|
நொறுக்கிவிட்டது பாகிஸ்தான்
இந்திய பந்துவீச்சை நொறுக்கிவிட்டது பாகிஸ்தான்... இந்தியா வெற்றி பெற வேண்டுமென்றால் அவர்களின டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் விளையாட வேண்டும்... என்கிறார் இந்த நெட்டிசன்..