நாராயணா... இந்த கொசு தொல்ல தாங்கலப்பா...!! தீபா கணவர் மாதவனை வச்சு வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
தீபாவின் கணவர் மாதவன் புதியக் கட்சித் தொடங்கியுள்ளதை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
சென்னை: தீபாவின் கணவர் மாதவன் புதியக் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம் எனக் கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாதவனின் மனைவி தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் பேரவை ஒன்றை தொடங்கினார். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மோதலால் அந்த அமைப்பில் நிர்வாகிகள் தெறித்து ஓடினர்.
இந்நிலையில் கணவர் மாதவன் புதியக்கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். அவரை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்..
|
இந்த கொசுத் தொல்ல தாங்கலப்பா..
நாராயணா... இந்த கொசு தொல்ல தாங்கலப்பா... எம்ஜெடிஎம்கேன்னா... மைக்கேல் ஜாக்சன் முன்னேற்ற கழகமா? என கேட்டு கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்..
|
பங்காளி புதுக்கட்சி..
பங்காளி புதுக்கட்சி ஆரம்பிச்சிருக்கார்... என தீபாவின் கணவர் புதுக்கட்சி தொடங்கிருப்பதை ஓட்டுகிறார் இந்த வலைஞர்...
|
மாமியார் .ஜெயலலிதா திமுக
மாமியார் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகமா... என கேட்டு தீபா கணவர் மாதவனை கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்..
|
என்னமோ போடா மாதவா..
எம்ஜெடிஎம்கே என்றக் கட்சியை தொடங்கினார் மாதவன்.. என்னமோ போடா மாதவா... என கலாய்க்கிறார் இந்த வலைதளவாசி...