சமாதி முன்னாடி தியானம் பன்ற வேலையை தொடங்கி வச்சது யாருனு தெரியுமா?
சமாதி முன்னாடி தியானம் செய்யும் பணியை தொடங்கி வைத்தது எம்ஜிஆர் என்கிறார்கள். அவர் கடந்த 1972-இல் அண்ணா சமாதியில் அமர்ந்து தியானம் செய்தாராம்.
சென்னை: ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுகவில் பல்வேறு பிரச்சினை ஏற்பட்டு வருகின்றன. அதில் மிகவும் அதிகமாக பிரதிபலிக்கும் பிரச்சினை கோஷ்டி உருவாக்கம் ஆகும்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக இரண்டாக பிரிந்தது. எனினும் கட்சியின் நலன் கருதி கடந்த அமாவாசை அன்று இரு அணிகளும் ஒன்று சேர்ந்தன. ஆனால் தினகரன் தலைமையில் உருவான அணி அப்படியே வம்படி செய்து வருகிறது.
இதனால் ஆட்சி கவிழுமா என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமா என்றும் கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில் அதிமுகவின் மோதல் குறித்து டுவிட்டரில் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.
|
சமாதி முன்பு தியானம் செய்யும் எம்ஜிஆர்
1972-இல் அண்ணா நினைவிடத்தில் தியானம் செய்த எம்ஜிஆர்.
இப்ப தெரியுதா தியானம் செய்யறத யார் தொடங்கி வைச்சதுனு என்கிறார் இந்த நெட்டிசன்.
|
சொப்பனசுந்தரி காமெடி மறந்துபோச்சு
கவுண்டமணி "சொப்பனசுந்தரி" காமெடியே மறந்து போச்சி...
#அதிமுக-வ யாருதான் வெச்சிருக்கா...ஷப்பா மிடில
|
இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறேன் பாஸ்
அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து வைத்தியலிங்கம் எம்.பி நீக்கம் : டிடிவி தினகரன் அதிரடி
இன்னும் அதிகமா எதிர்பார்கிறேன் பாஸ்
|
ஓபிஎஸ் ட்ரிக்கர் பன்னிட்டார்
தினகரன் நவ்; இந்த ஓபிஎஸ் ட்ரிக்கர் பன்னி எடப்பாடி'யை பிரிச்சிட்டாரு சார்
|
செய் ஏதாவது செய்....
செய் ஏதாவது செய்...
சொல்லாததை செய்...
செய்யாததை செய் ...
சாங் டெடிக்டேட் டு டிடிவி தினகரன்
#AIADMKMerger