தமிழகத்தில் இன்று
வருகிறது ஈ-காமர்ஸ் பிளாட்பார்ம்
நியுயார்க்:
இ-காமர்ஸ் என்ற இன்டர்நெட் வர்த்தகம் மூலம் ஒரே நேரத்தில் அதிக பொருட்களை வியாபாரிகள் வாங்கும் வசதி கொண்ட புதிய இ-காமர்ஸ்பிளாட்பாரத்தை உருவாக்கியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த அவரது பெயர் சசி ரெட்டி. தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவர், ஐகோஆப் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இ-காமர்ஸ் மூலம் அதிக பொருட்களை வாங்கும் வியாபாரிகளின் வசதிக்காகவும், நலனுக்காகவும் புதிய இ-காமர்ஸ் பிளாட்பாரத்தைஉருவாக்கியுள்ளார் இவர்.
வாங்குபவர்களின் விருப்பத்துக்கு ஏற்ற விலையுள்ள பொருட்களை அதுவும் குறிப்பாக, மொத்த விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு வசதியாக உள்ளஇ-காமர்ஸ் பிளாட்பார்ம் தான் எதிர்காலத்தில் தேவைப்படும்.
ஏற்கெனவே இது போன்ற பிளாட்பார்ம்கள் அதிகம் வந்துள்ளன. ஆனால் நான் உருவாக்கியுள்ளது அவற்றை விட மேலும் சிறப்பானது என்றுஅவர் கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.