For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஒத்துழைத்தால் நல்லது....கிரிக்கெட் வீரர்களுக்கு வருமான வரித்துறை அறிவுரை

டெல்லி:

மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக வருமான வரித்துறையினர் மேற்கொண்டுள்ள விசாரணைக்கு கிரிக்கெட் வீரர்கள் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றுவருமான வரித்துறையின் விசாரணைப் பிரிவு இயக்குநர் எஸ்.சி. பாரிஜா தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் கட்டுப்பாட்டு அதிகாரிகள், கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் ஆகியோர் மேட்ச் பிக்ஸிங்கில்ஈடுபட்டதாக சமீப காலமாக பல புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக சிபிஐ (மத்திய புலனாய்வுப் பிரிவு) விசாரணை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டவர்கள் லட்சக்கணக்கில்லஞ்சம் வாங்கியுள்ளனர் என்ற புகார் தொடர்பாக வருமான வரித்துறையும் விசாரணையில் இறங்கியது.

இந் நிலையில், ஜூலை 19, 20 ஆகிய தேதிகளில் கபில்தேவ், ஜடேஜா, மோங்கியா, அசாருதீன், ஜக் மோகன் டால்மியா மற்றும் கிரிக்கெட்சூதாட்டக்காரர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

ஒரே நேரத்தில் நாடு முழுவதும் சுமார் 90 இடங்களில் இச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச் சோதனையில் பல ஆவணங்கள், வீடுகளின்தஸ்தாவேஜுகள், கணக்கில் காட்டப்படாத பணம் என பலவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சோதனையின் ஒரு பகுதியாக முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் 17 வங்கி லாக்கர்கள் சீல்வைக்கப்பட்டன. சுமார் 200-க்கும் அதிகமான வங்கிக் கணக்குகளை அவர்கள் வைத்திருந்ததாக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனை பற்றி பாரிஜா கூறியதாவது:

நாங்கள் சீல் வைத்த வங்கி லாக்கர்களில் இரண்டை செவ்வாய்க்கிழமை திறந்து சோதனை செய்தோம். ஒரு லாக்கர் கிரிக்கெட் வீரருக்கும்,மற்றொன்று அவரது உதவியாளருக்கும் சொந்தமானது.

லாக்கர்களில் இருந்தவை குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை தொடரும். இது குறித்து இப்போதைக்கு வேறு தகவல்களைத்தெரிவிக்க முடியாது.

வருமான வரித்துறையினரின் விசாரணைக்குக் கிரிக்கெட் வீரர்கள் ஒத்துழைக்க வேண்டும். இதுவரை அவர்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.

இது தொடரும் வரை அவர்களை நாங்கள் துன்புறுத்தமாட்டோம். கிரிக்கெட் வீரர்கள் தாங்களாகவே முன்வந்து மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதுதொடர்பான ஆவணங்களைக் காட்டி வருகின்றனர்.

ஜடேஜா வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரி ஒருவர், ரூ 50 ஆயிரம் கொடுத்தால் வழக்கைத் தள்ளுபடி செய்துவிடுவதாக ஜடேஜாவிடம் கூறியதாகசெய்திகள் வெளியாகியுள்ளன. இது பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் எந்த கிரிக்கெட் வீரரும், அதிகாரியும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருந்ததற்கான ஆதாரம் ஏதும்கிடைக்கவில்லை. ஆனால், சில டைரிகளைக் கைப்பற்றியுள்ளோம். அது பற்றி விசாரித்து வருகிறோம்.

அசாருதீன், ஜடேஜா, நிகில் சோப்ரா, அஜய் ஜடேஜா ஆகியோர் இங்கிலாந்தில் உள்ளனர். அவர்கள் இந்தியா திரும்பியவுடன் அவர்களிடம் விசாரணைநடத்தப்படும்.

மேற்கண்டவர்களின் வீடுகளில் இன்னும் சோதனை நடத்தவில்லை. சீல் வைத்திருக்கிறோம். அவர்கள் வந்தபிறகு அவர்கள் முன்னிலையில், சோதனைநடத்தப்படும் என்றார் பாரிஜா.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X