தமிழகத்தில் இன்று
பங்குகளை "உடைக்கிறது" ஹீரோ ஹோண்டா
டெல்லி:
ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் தனது 10 ரூபாய் பங்குகளை இரண்டு 5 ரூபாய் பங்குகளாகப் பிரிக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அக்டோபரில் நடைபெற உள்ள நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
பங்குகளைப் பிரிக்கும் முடிவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தவும் ஹீரோ ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அந்த புதிய மோட்டார் சைக்கிளின் அடிப்படை வடிவமும், இன்ஜினும் ஜப்பானில் உள்ள ஹோண்டா மோட்டார் நிறுவனத்தில் உருவாக்கப்படவுள்ளன.
பெட்ரோல் தவிர வேறு எரிபொருளில் இயங்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்குவது பற்றியும் இந் நிறுவனம் யோசித்து வருகிறது.
ஹீரோ ஹோண்டா நிறுவனம் ,1999-2000-ம் ஆண்டில் 58.26 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. மொத்தம் ரூ.192.08 கோடி வருவாயை அந்நிறுவனம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 71 கோடி அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.