ஐ.சி.சி. நாக் அவுட் போட்டிக்கு 14 பேர் கொண்ட வங்கதேச அணி தயார்
தாக்கா:
கென்யா தலைநகர் நைரோபியில் அக்டோபர் 3-ம் தேதி முதல் நடைபெறவுள்ளசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நாக் அவுட் கிரிக்கெட் போட்டியில்பங்கேற்கும் வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
14 பேர் கொண்ட கிரிக்கெட் அணிக்கு ஆல்ரவுண்டர் நைமூர் ரஹ்மான் கேப்டனாகஅறிவிக்கப்பட்டுள்ளார். நைரோபி போட்டியில் 10டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும்நாடுகள் கலந்து கொள்கின்றன. மினி உலகக் கோப்பை என்று வர்ணிக்கப்படும் இந்தப்போட்டி 1998-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் வங்கதேச அணிக்கு டெஸ்ட் அணி என்ற அந்தஸ்துவழங்கப்பட்டது. அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் போட்டியில் இங்கிலாந்துஅணியைச் சந்திக்கிறது வங்கதேசம்.
நைரோபி செல்லும் வங்கதேச அணியில், முன்னாள் கேப்டன்கள் அக்ரம் கான்,அமீனுல் இஸ்லாம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். பயிற்சியாளர் பின்னர்அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.