For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வர்றீங்களா, இல்லையா?...இந்தியாவை கேட்கிறது பாகிஸ்தான்

By Staff
Google Oneindia Tamil News

துபாய்:

பாகிஸ்தானில் மேற்கொள்ளவுள்ள கிரிக்கெட் சுற்றுப்பயணம் குறித்து இந்த மாத இறுதிக்குள்உறுகியாகத் தெரிவிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்தை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர்-ஜனவரி மாதவாக்கில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்ய இந்திய கிரிக்கெட்அணி திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் சீரற்ற உறவு மற்றும் மேட்ச்பிக்ஸிங் புகார் உள்ளிட்ட பல காரணங்களுக்காக பாகிஸ்தானுடனான டொரன்டோ தொடருக்குஅனுமதி கொடுக்க மத்திய அரசு மறுத்து விட்டது.

தற்போது துபாயில் ஆசிய கிரிக்கெட் சங்க கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் இந்தியகிரிக்கெட் வாரியத் தலைவர் ஏ.சி.முத்தையா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் லெப்டினன்ட்ஜெனரல் தக்கீர் ஜியா, இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் சுமதிபாலா மற்றும் சர்வதேசகிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜக்மோகன் டால்மியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தின்போது, இந்திய அணியின் பாகிஸ்தான் தொடர் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் வாரியத்தலைவர் ஆர்வம் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்று முத்தையா கூறுள்ளார். கல்ப்நியூஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், ஆசிய கிரிக்கெட் சங்க விவகாரம் குறித்துப் பேசவே இங்குவந்துள்ளேன். இந்திய அணியின் பாகிஸ்தான் தொடர் குறித்து வரவில்லை என்றார் முத்தையா.

முன்னதாக கல்ப் நியூஸ் பத்திரிகைக்கு ஜியா அளித்த பேட்டியில், முத்தையாவைச் சந்திக்க ஆர்வமாகஉள்ளேன். இந்திய அணியின் வருகை குறித்து விவாதிக்க விருப்பமாக உள்ளேன். தொடரில் இந்தியாகலந்து கொள்கிறதா, இல்லையா என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் தெரிவித்தால் நன்றாகஇருக்கும். அதை வைத்துத்தான் எங்களது அடுத்த கட்ட தொடர்கள் குறித்து முடிவு செய்ய முடியும்.

ஒருவேளை இந்தியா வராவிட்டால், வேறு ஏற்பாடுகள் குறித்தும் நாங்கள் யோசித்து வருகிறோம்.உலக லெவன் அணியை அழைத்து பாகிஸ்தானில் விளையாட வைக்கவும் யோசித்து வருகிறோம்.ஆனால் கண்டிப்பாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.

இதற்கிடையே, நைரோபி செல்லும் இந்திய அணியின் பயிற்சியாளராக கபில்தேவ் நீடிப்பாரா என்றகேள்விக்கு முத்தையா பதிலளிக்கையில், இதுகுறித்து கபில் தேவுடன் பேசுவேன். விரைவில் எனதுமுடிவைத் தெரிவிப்பேன். செப்டம்பர் 15-ம் தேதி சென்னையில் துவங்கும் பயிற்சி முடிவுக்கு முன் கபில் தேவ்குறித்து முடிவு செய்யப்படும் என்றார் முத்தையா.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X