For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேயர்களின் சொத்துக் கணக்கு கேட்கிறது ஹைகோர்ட்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை, மதுரை மேயர்கள், துணை மேயர்கள் சொத்துக் கணக்கை சமர்ப்பிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு 4வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி மாநகராட்சி கமிஷனர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க.வக்கீல்கள் பிரிவு மாநிலச் செயலாளர் பிலிப் தாமஸ். இவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றைத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், மாநகராட்சி மேயர்களின் சொத்து விவரங்களைத் தெரிந்து கொள்ளபொதுமக்களுக்கு உரிமை உள்ளது.

சென்னை மேயர் ஸ்டாலின், துணை மேயர் ஜெயச்சந்திரவதனா, ஆகியோரின் சொத்து விவரங்களைவெளியிடுமாறு மாநகராட்சிக்கு விண்ணப்பித்துள்ளேன். எனவே அவர்கள் பதவியேற்ற நாள் முதல் அவர்களதுசொத்து விவரங்களை வெளியிட மாநகராட்சிக் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதே போல் வக்கீல் தமிழ்செல்வன் என்பவர் மதுரை மேயர் குழந்தைவேலு, துணை மேயர் மிசா. கணேசன்ஆகியோரின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்திருந்தார்.

இரு மனுக்களையும் விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி என்.கே.ஜெயின், நீதிபதி ரவிராஜ பாண்டியன்ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதுகுறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி இரு மாநகராட்சிக்கமிஷனர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X