ராஜ்குமாரை மீட்பதில் தோல்வி:கோபால் சென்னை வந்தார்-நெடுமாறனும் திரும்பி வருகிறார்
சென்னை:
ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் தோல்வியடைந்த கோபால் செவ்வாய்க்கிழமை காலை சென்னைதிரும்பினார்.
பழ.நெடுமாறன், கல்யாணி, சுகுமாறன் அடங்கிய குழு இன்று தான் காட்டைவிட்டுக் கிளம்பி மாலைதான் சென்னை வருகிறது. இவர்கள் கோபாலுடன் வரவில்லை.
இதன்மூலம் கோபாலுக்கும் நெடுமாறனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புகைச்சல் மீண்டும்உறுதியாகியுள்ளது. நெடுமாறனை அழைத்துச் செல்ல கோபால் முன்பிருந்தே தயாராக இல்லை.அதே போல தூதுக்குழுவுக்கு யார் தலைவர் என்பதிலும் பிரச்சனை உள்ளது.
கோபால் தான் தலைவர் என நக்கீரன் அழுத்திக் கூறுகிறது. அதே போல திமுகவை கடுமையாகஎதிர்க்கும் பழ. நெடுமாறனை தூதுக்குழுவின் தலைவராக அறிவிக்க கருணாநிதியும் தயாராகஇல்லை.
வீரப்பன் நிபந்தனை விதித்ததால் வேறு வழியில்லாமல் அவரை அனுப்பி வைக்க சம்மதித்தது தமிழகஅரசு. தமிழக அரசின் வற்புறுத்தல் காரணமாக வேறு வழியில்லாமல் அவரை அழைத்துச் சென்றார்கோபால்.
இப்போது அவர்களிடையிலான மோதல் மீண்டும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் கூறுகையில், கோபால் தனியே கிளம்பி சென்னை வந்துசேர்ந்துவிட்டார் என்றார்.