உங்கள் கால்நடைகளுக்கு உடம்பு சரியில்லையா?
சென்னை:
உங்கள் கால்டைகளுக்கு உடம்புக்கு முடியலையா? இனிமேல் நீங்கள் கால்நடை மருத்துவமனைகளுக்கு அவற்றைஎடுத்துச் செல்ல வேண்டியதில்லை. ஹோமியோபதி மருத்துவம் மூலம் அவற்றைக் குணப்படுத்த முடியும்.
சென்னையைச் சேர்ந்த பாரதீய பிராணி மித்திரா சங்கம் (இந்திய பிராணிகள் நலச் சங்கம்) என்ற அமைப்பின்சார்பில் விலங்குகளுக்கு ஹோமியோபதி மருத்துவம் மூலம்தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்சாவித்ரிதான் அந்த மருத்துவர்.
மத்திய அரசின் நிறுவனம் இது. இங்கு கால்நடைகளுக்கு வரும் வலிகள், சளி, இருமல், காயங்கள் மற்றும் பல்வேறுநோய்களுக்கு ஹோமியோபதி மூலம்தான் சிகிச்சை தரப்படுகிறது.
தன்னிடம் சிகிச்சைக்கு வரும் கால்நடைகளை முதலில் காந்தவியல் கருவிகள் மூலம் இவர் ஆராய்கிறார். பின்னர்,என்ன பிரச்சினை என்பதைத் தெரிந்து கொள்கிறார். அதன் பிறகு, தேவையான ஹோமியோபதி மருந்துகளைக்கொடுக்கிறார்.
தனது சிகிச்சை முறை குறித்து டாக்டர் சாவித்ரி கூறுகையில், ரடீஸ்தியா என்ற சிகிச்சை முறை உள்ளது. இதன் மூலம்கால்நடைகள் உடல்நலமில்லாமல் இருப்பதை அறிந்து கொள்ள முடியும். இதற்கு காந்தங்கள் அதிகம்பயன்படுகின்றன. உடலில் ஏற்படும் மாற்றங்களை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
மனிதர்களைப் போல, கால்நடைகளுக்கு தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் உடல் உபாதைகளை வெளிக்காட்டமுடியாது. நாம்தான் அதை பக்குவமாக அறிய வேண்டும் என்கிறார் சாவித்ரி.
தனது தந்தையிடமிருந்து இந்த சிகிச்சை முறையைக் கற்றுக் கொண்டுள்ளார் டாக்டர் சாவித்ரி. அதற்குப் பதிலாகதனது தந்தைக்கு ஜெர்மனி மருத்துவ முறையான ஹோமியோபதியைக் கற்றுக் கொடுத்துள்ளார் சாவித்ரி.
எனது மருத்துவ முறையை டாக்டர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அதற்காக நானும் கவலைப்படுவதில்லை என்கிறார்சாவித்ரி புன்னகையுடன்.
யு.என்.ஐ.