வானிலிருந்து ஒரு "பல்டி .. உயிர் தப்பிய பெண்
கோலாலம்பூர்:
வானிலிருந்து குதிக்கும் போது பாராசூட் விரியாமல் இருந்ததால், உயிரிழந்து விடுவார் என்று கருதப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த பெண் 1.5கிலோமீட்டர் தொலைவிலிருந்து பூமியில் விழுந்தும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
மலேசியாவிலுள்ள கோலாலம்பூரைச் சேர்ந்தவர் டாங்க் (27). இவர் கடந்த பிப்ரவரி 4 ம் தேதி கோலாலம்பூர் விமான தளத்திலிருந்து பாரசூட் மூலம்விண்ணில் பறந்து அங்கிருந்து கீழே குதிக்க நினைத்தார்.
திட்டப்படி அவர் குதிக்க முயன்ற சமயத்தில் பாரசூட் விரியவில்லை. இதையடுத்து 1.5 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தார். ஆனால் லேசானகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
இதுகுறித்து டாங்க் கூறுகையில், நான் உயிர்பிழைத்ததை என்னாலேயே நம்பவே முடியவில்லை. மேலிருந்து குதிக்கும் போது பாரசூட் விரியாமல் இருந்தும்நான் உயிர்பிழைத்து விட்டேன் என்பது எனது அதிர்ஷ்டம்தான்.
முதலில் மேலிருந்து குதிப்பதற்காக விமானத்தில் உள்ள இரும்புக் கம்பியை மிகவும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன். அங்கிருந்து குதிக்க முயன்றபோது பாரசூட் விரியவில்லை. மேலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவிலிருந்து மண்ணில் விழுந்தேன்.
கீழே விழுவதற்கு முன் எனது பயிற்சியாளர் பாரசூட்டை விரிக்குமாறு வாக்கி டாக்கி மூலம் என்னைத் தொடர்பு கொண்டு கூறினார். ஆனால் அதுமுடியாமல் போயிற்று.
நான் கீழே விழுந்த பின் என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் தெரியாது. அதற்குப்பின் 3 மணி நேரங்களுக்குப்பின் எழுந்து பார்த்த போது நான்உயிர்பிழைத்து விட்டேன் என்று தெரிந்தது.
கடவுள் கண்டிப்பாக அனைத்து வல்லமையும் பெற்றவர். அவரது அருளால்தான் நான் பிழைத்தேன். இல்லாவிடில் சாதாரண மணற்பரப்பில் விழாவில்மிகவும் கோரமான பகுதியில் விழுந்திருந்தால் இந்நேரம் இறந்திருப்பேன் என்றார் டாங்க்.