காதலர் தினத்தை எதிர்க்கிறது சிவசேனா
டெல்லி:
சிவசேனாவின் டெல்லி பிரிவு புதன் கிழமை காதலர் தின கொண்டாட்டங்களைஎதிர்த்து போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளது.
காதலர் தினத்தை எதிர்த்து டெல்லி முழுவதும் நோட்டீஸ்கள் ஒட்டப்படும் எனவும் அதுதெரிவித்துள்ளது.
சிவசேனா தலைவர் பால் தாக்கரே காதலர்தினம், இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானதுஎன்பதால் அதை எதிர்த்து போராடுமாறு தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.
மேலும் கடைக்காரர்களை காதலர் தினத்தையொட்டி எந்த விதமான சிறப்புபொருட்களையும் விற்க வேண்டாம் எனவும், ஓட்டல் உரிமையாளர்களை எந்தவிதமான சிறப்பு விருந்தும் நடத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளுமாறும்கூறியிருந்தார்.
இது குறித்து டெல்லி சிவசேனா தவைர் ஜெய் பகவான் கோயல் வெளியிடுள்ளசெய்திக் குறிப்பில், காதலர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது?. காதலர்கள்கொண்டாட்டத்திற்கு ஒரு நாள் மட்டும் போதுமா?. சிவ சேனா தொண்டர்கள் டெல்லிமுழுவதும் காதலர் திள கொண்டாட்டத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
இதற்காக 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் டெல்லியில் இருக்கும்அனைத்து கடைகள், ஓட்டல்கள், உணவு விடுதிகள் மற்றும் வாழத்து அட்டை விற்கும்கடைகளுக்குச் சென்று காதலர் தின கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனகேட்டுக் கொள்வார்கள் என கூறினார்.
சென்ற ஆண்டு கூட மனித உரிமை கழகத்தினர் காதலர் தின கொண்டாட்டத்தை தடைசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.