பூகம்ப பகுதியில் அணுமின் நிலையும் அமையுமா?
போபால்:
மத்திய பிரதேசத்தில் 2000 மெகாவாட் அணுமின் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் பூகம்பபாதிப்புக்கு உள்ளாகும் என்பதால் இத்திட்டம் அமைவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
1984லிருந்து மத்திய பிரதேசத்தில் பல இடங்களை பார்வையிட்ட அணுசக்திக் கழகம், மாண்ட்லா மாவட்டம்,ஜபல்பூர் அருகே உள்ள சட்கா கிராமத்தை தேர்ந்தெடுத்தது. மாற்று இடமாக ஷிவ்புரி மாவட்டத்தின் ராஜாஜ்பூர்கிராமத்தை தேர்வு செய்திருந்தது.
இந்த இரண்டு இடங்களும் நர்மதா பூகம்ப பாதிப்பு பகுதியில் அமைந்துள்ளன. இந்த நர்மதா பூகம்ப பாதிப்பு பகுதிஅமைந்துள்ள பூமித்தகட்டில் 10 முதல் 12 கி.மீ அகலத்திற்கு பிளவுகள் பல காணப்படுகின்றன.
இதனால் இப்பகுதியில் பூகம்ப தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என நர்மதை பகுதியில் பூகம்பம் பற்றி அதிகஆய்வுகளை மேற்கொண்ட பூகம்பவியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ராம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
கடந்த நூற்றாண்டில் 5 முறை பூகம்பத் தாக்குதலுக்குள்ளான ஜபல்பூரில் 1997ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் 39பேர் பலியானதோடு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் சேதமடைந்தன. எனவே, பாதுகாப்பானஇடத்திற்காக மீண்டும் ஒரு தேடுதல் வேட்டை நடத்தப்படுமா? அல்லது திட்டம் கைவிடப்படுமா? என்பது அணுமின்சக்திக் கழகத்தின் கையில் உள்ளது.
யு.என்.ஐ.