நீர்மூழ்கிகளில் அணு ஆயுத ஏவுகணை: பாக். கடற்படைத் திட்டம்
இஸ்லாமாபாத்:
தனது நீர்மூழ்கிகளில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை பொருத்த பாகிஸ்தான்திட்டமிட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் கப்பற்படையுடன் இணைந்து நடத்திய போர் ஒத்திகைக்கு பின் கராச்சியில் நிருபர்களிடம்பேசிய பாகிஸ்தான் கப்பற்படை துணை தளபதி ரியர் அட்மிரல் அப்ஸால் தாஹிர் இதைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை மறைமுகமாக குறிப்பிட்டு பேசிய அவர், எதிரியிடம் எண்ணிக்கை பலத்தை முறியடிக்கும் விதத்தில்பாகிஸ்தானின் கப்பற்படை தரத்தில் வலுப்படுத்தப்படும்.
3 அகோஸ்டா 90-பி வகை நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸிடம் இருந்து வாங்கியுள்ள பாகிஸ்தான் அதனைதயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ளது.
வான்வெளித் தாக்குதலுக்கும் சிறந்த படை பாகிஸ்தானில் உள்ளது. பாகிஸ்தானின் கப்பற்படை வலிமையைஅதிகரிக்க நாட்டின் பொருளாதாரம் இடம் கொடுக்காததால் நவீன போர்க்கப்பல்கள் வாங்குவது தடைபடுகிறதுஎன தெரிவித்தார்.
டி.பி.ஏ.