For Daily Alerts
Just In
சிறைச்சாலையில் கஞ்சா கடத்திய போலீஸார்
சேலம்:
சேலம் சிறையில் கஞ்சா கடத்திய வழக்கில் 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மத்திய சிறையில் சிறைக் கைதி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் சிறையில் நடந்த சோதனையில்கஞ்சா, தீப்பெட்டி, சிகெரட் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த பொருட்கள் எப்படி வந்தது என்பது பற்றி விசாரணை நடத்த சேலம் சரக டி.ஐ.ஜி, ஜெகநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் நடந்தவிசாரணையில், 6 போலீஸ்காரர்களுக்கு கஞ்சா கடத்தலில் தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 6 போலீஸ்காரர்களும் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்.
இதில் புவனேந்திரன், ராஜாமணி, முத்துசாமி, பாலகிருஷ்ணன், ரமேஷ் மற்றும் தையல் வாத்தியார் திருப்பதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments
Story first published: Thursday, February 22, 2001, 5:30 [IST]