For Daily Alerts
Just In
காஞ்சியில் பள்ளிக் கூடத்தில் தீ
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் உள்ள பள்ளி ஒன்றில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் பாதி பள்ளிக் கட்டிடம் சேதமடைந்தது.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், செய்யூர் பள்ளியில் புதன்கிழமை மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து செய்யூர் கிராம மக்கள், பள்ளிக்குச்சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பாதி பள்ளிக் கட்டிடம் சேதமடைந்தது என்றனர். போலீஸார் தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கான காரணம்குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யு.என்.ஐ.
Story first published: Thursday, February 22, 2001, 5:30 [IST]