சின்ஹா... சின்ஹா...
டெல்லி:
தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தொடர்ந்து வரிச்சலுகைகள் அளிப்பதோடு கணினி வழி வர்த்தக வருமானத்திற்கு (இ-காம் பிஸினஸ் இன்கம்) அடுத்த 5ஆண்டுகளுக்கு வருமான வரிவிதிக்க வேண்டாம் என நாஸ்காம் அமைப்பு மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை கேட்டுக்கொண்டுள்ளது.
தனது 4வது பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள சின்ஹாவிற்கு திடீரென ஏற்பட்ட குஜராத் பூகம்பத்தால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் புதிய வரிவருவாய் ஆதாரங்களை தேடி வருகிறார்.
தற்போது வளர்ந்து வரும் இ-காம் பிஸினஸ் வருவாய்க்கு சின்ஹா வரி விதிக்க கூடும் என்ற நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரமோத்மகாஜனும், தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கமான நாஸ்காமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பட்ஜெட் தொடர்பாக நிதி அமைச்சருக்கு அளித்த அறிக்கை ஒன்றில், வளர்ந்துவரும் இ-காம் துறை வருமானத்திற்கு மற்ற நாடுகளில் வரிவிதிக்கப்படுவதில்லை. இந்தியாவில் மட்டும் வரி விதித்தால் இத்துறையில் முதலீடு குறைந்து வளர்ச்சி பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பங்குகள் உள்ளிட்ட ஸ்டாக்குகளை தரவரிசைப்படுத்தும் ஐ.ஸி.ஆர்.ஏ. நிறுவனத்தின் செயல் இயக்குநர்அமுல் கோக்னா கூறும் போது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான தெளிவான திட்டம் வகுக்க இந்த பட்ஜெட் வகை செய்ய வேண்டும்என்றார்.
2003ம் ஆண்டிற்குள் உள்நாட்டு கணிப்பொறிகள் உற்பத்தி தொழிலுக்கு உருப்படியான திட்டம் வகுக்கப்படவில்யைெனில் இறக்குமதியால் உள்நாட்டுஉற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர்.
கணிப்பொறி பாகங்கள் உற்பத்தி தொழில் வளர்ச்சி பெற வரி விதிப்பிலும் மாற்றங்கள் தேவை என இந்திய தகவல்தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள்சங்கத்தின் இயக்குநர் வின்னி மேத்தா தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.