சூடு பிடிக்கிறது உள்ளாட்சித் தேர்தல்
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் தொடர்பானஆலோசனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இது தொடர்பாக, தமிழகத்தின் முக்கியக் கட்சியான திமுக, வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஆலோசனைக்கூட்டத்தை நடத்துகிறது. கலைஞர் அரங்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தேர்தல் கூட்டணி உள்ளிட்டபல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
அதேபோல பாரதீய ஜனதாக் கட்சி மயிலாடுதுறையில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் தேர்தல் குறித்துவிவாதித்து வருகிறது.
அதேபோல வரும் 9ம் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர். கழகம் ஏற்பாடு செய்துள்ளது.இக்கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்குகிறார்.
திமுக கூட்டணிக் கட்சிகள்தான் தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.சட்டசபைத் தேர்தலில் விட்ட வெற்றியை இம்முறை தட்டிப் பறித்து விட வேண்டும் என்ற வேகத்தில் அவைஉள்ளன.