இதுவரை 240 உடல்கள் மீட்பு
நியூயார்க்:
விபத்துக்குள்ளான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஏ-300 விமான நிலையத்தின் சிதைவுகளிலிருந்து இதுவரை 240உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தீயணைப்பு வீரர்கள் ஒரு பக்கம் தீயை அணைத்துக் கொண்டிருக்க, மறு பக்கம் மீட்புப் படை வீரர்கள் விமானப்பயணிகளின் உடல்களை மீட்டுக் கொண்டுள்ளனர்.
இதுவரை 240 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானத்தின் கறுப்புப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்விபத்துக்குத் தீவிரவாதிகள் காரணம் அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது. இருந்த போதிலும் விமானவிபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
விமானத்திலிருந்த 246 பயணிகளில் ஐந்து குழந்தைகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர்கள் இரங்கல்
விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தன்னுடைய ஆழ்ந்தஇரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயும் தன்னுடைய இரங்கலைத் தெரிவித்தார்.
இவர்கள் தவிர, இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், பிரெஞ்ச் பிரதமர் லியோனல் ஜோஸ்பின், ஜெர்மன் அதிபர்ஜெர்ஹார்டு ஸ்ரேடர் உள்பட பல நாட்டுத் தலைவர்களும் இரங்கல் செய்திகளை அனுப்பியுள்ளனர்.