ஜெ. அப்பீல் வழக்கு: ஐகோர்ட்டுக்கு உதவ முன் வந்தார் திமுக வக்கீல்
சென்னை:
லண்டன் ஹோட்டல் முறைகேடு தொடர்பான ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீதான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் சண்முகசுந்தரம் முன் வந்துள்ளார். இவர் கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்அதிமுக ரெளடிகளால் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளானவர்.
இவர் பின்னர் பதவிக்கு வந்த திமுக ஆட்சியில் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டார். தீவிர திமுக அனுதாபி.
டான்சி அப்பீல் மனு மீதான வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பில் ஆஜராகும் வக்கீல் வெங்கடபதியை, லண்டன்ஹோட்டல் அப்பீல் விசாரணையிலும் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை நிராகரித்த நீதிபதி தினகரன், அதற்குப் பதில் முன்னாள் அரசு வக்கீல் சண்முக சுந்தரம் இந்த வழக்கில் உதவமுடியுமா என்று கேட்டிருந்தார். அதை வக்கீல் சண்முக சுந்தரம் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து வழக்கின்அடுத்த கட்ட விசாரணை வரும் 15ம் தேதி துவங்குகிறது.
கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தின் போது வக்கீல் சண்முக சுந்தரம் அதிமுகவினரால் கொலை வெறித்தாக்குதலுக்கு ஆட்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.