For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஸ் ஸ்டிரைக்: தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் பாய்ச்சல்

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

பஸ் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தமிழக அரசே காரணம் என்று மத்திய விளையாட்டுத் துறை துணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கோவையில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

பஸ் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுவது குறித்து அரசுக்கு தெரியும். எனவேஉரிய நேரத்தில் இதுதொடர்பாக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முயற்சிகள் எடுத்திருக்கவேண்டும்.

பஸ் ஊழியர்கள் கோரிக்கை விடுத்த போதெல்லாம் அமைதி காத்து விட்டு போராட்டத்தில் குதிப்பது என அவர்கள்முடிவெடுத்த பின் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அதையும் சரியாக நடத்தாமல் இருந்தது அரசின் தவறே. இதுவேதற்போது போராட்டம் பெரிதாகக் காரணமாக அமைந்து விட்டது.

விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்ய அந்தந்த விளையாட்டுக்குழுவிற்கும், சங்கங்களுக்கும் முழு சுதந்திரம்அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்யும் போது மிகுந்த கவனத்துடன் நல்லதிறமையுள்ள வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்றபடி எந்தவித அரசியல் தலையீடும் இல்லை.

மேலும் விளையாட்டுக்குத் தற்போது மாநில அரசுகளும் முக்கியத்துவம் தந்து விளையாட்டு வீரர்களைஉற்சாகப்படுத்தி வருகிறது. இது பாராட்டத்தக்க விஷயம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X