என் காதலி கிளுகிளு படம் எடுத்தவர்கள் கைது
பாண்டிச்சேரி:
என் காதலி என்ற பெயரில் செக்ஸ் படம் எடுத்த தயாரிப்பாளரும், டைக்டரும் கைது செய்யப்பட்டனர். செக்ஸ்காட்சிகளை படம் பிடித்த ஒளிப்பதிவாளர் தலைமறைவாகிவிட்டார்.
பாண்டிச்சேரியில் சமீபத்தில் என் காதலி ரிலீஸ் ஆனது. படத்தில் ஆங்காங்கே சூடான பிட் காட்சிகள்காட்டப்பட்டன. இதையடுத்து அந்தப் படத்தின் பிலிம் சுருளை கைப்பற்றிய போலீசார் அதை சென்னை செனசார்போர்டின் பார்வைக்கு அனுப்பினர்.
சென்சார் போர்ட் அதிகாரிகள் படத்தைப் பார்த்தபோது அவர்கள் வெட்டி எறிந்த பல காட்சிகளை அதன்தயாரிப்பாளர் மீண்டும் இணைத்தும், மேலும் பல சீன்களை சேர்த்தும் வெளியிட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அதன் டைரக்டர் தீர்த்தமலை, தயாரிப்பாளர்களான பரணி, சம்பத், சிவக்குமார் ஆகியோரை கைதுசெய்தனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் உதயகுமரன் தலைமறைவாகிவிட்டார். இவர்கள் அனைவரும்பாணடிச்சேரியை சேர்ந்தவர்கள்.
அதே படத்தில் நடித்த நடிகர், நடிகைகளைக் கொண்டே பிட் காட்சிகளை எடுத்து இவர்கள் சேர்த்துள்ளனர்.
அந்த நடிக, நடிகைகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.