பாபா: தியேட்டர் உரிமையாளரை கடத்திய பாமகவினருக்கு முன் ஜாமீன்
சென்னை:
பாபா படம் திரையிடப்பட்ட தியேட்டர் உரிமையாளரைக் கடத்திய வழக்கில் தொடர்புடைய 6 பாமகவினருக்குசென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
விருத்தாச்சலத்தில் சந்தோஷ்குமார் பேலஸ் என்ற தியேட்டரில் பாபா படம் திரையிடப்பட்டிருந்தது. இந்ததியேட்டரை ராஜகோபால் என்பவர் குத்தகைக்கு எடுத்து அதில் பாபா படத்தை ரிலீஸ் செய்திருந்தார்.
ரஜினியை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து பாபா படத்துக்கு எதிராக பாமகதொண்டர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
விருத்தாச்சலத்தில் இந்தத் தியேட்டரின் குத்தகை உரிமையாளர் ராஜகோபாலை பா.ம.கவினர் கடத்திச் சென்றனர்.
இது தொடர்பாக பாமகவினர் வழக்குப் போடப்பட்டது. இதில் சதீஷ் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டார்.மற்றவர்கள் தலைமறைவாக இருந்தனர். இந் நிலையில் தலைமறைவாக இருந்த 6 பேரும் முன் ஜாமீன்கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
அதை ஏற்ற நீதிபதி முருகேசன், 6 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டிருந்த சதீஷ்என்பவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
-->