லாக்-அப்பில் தவிக்கும் விநாயகர்
மதுரை:
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி என்ற இடத்தில் கடந்த ஒரு வருடமாக விநாயகர் சிலை ஒன்று லாக் அப்பிற்குள்சிறை வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் விநாயகர்சிலைஊர்வலம் நடத்த அனுமதி கோரினர். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து போலீஸார் ஊர்வலத்திற்குத் தடை விதித்தனர்.
இந் நிலையில், தடையை மீறி ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லமுயன்றனர். உடனடியாக போலீஸார் தலையிட்டு அவர்களைக் கைது செய்து, விநாயகர் சிலையையும் பறிமுதல்செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிலையை லாக் அப்பிற்குள் வைத்தனர். அந்த சிலை இன்னும் லாக் அப்பிற்குள்ளேயேஇருக்கிறது. அடுத்த விநாயகர் சதுர்த்தியும் கூட வந்துவிட்டது.
இப்போதாவது விநாயகரை ரிலீஸ் செய்வார்களா போலீசார்?