தமிழர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது கர்நாடக அரசின் பொறுப்பு: ஜெயலலிதா
சென்னை:
அதிமுகவைச் சேர்ந்த தமிழ் எம்.எல்.ஏவை கன்னட வெறியர்கள் கர்நாடக சட்டசபை வளாகத்தில் வைத்து தாக்கியதற்கு தமிழகமுதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகத் தமிழர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்க வேண்டியதுகிருஷ்ணா அரசின் பொறுப்பு என அவர் கூறியுள்ளார்.
கோலார் தங்கவயலைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. பக்தவச்சலம் விதான செளதாவில் வைத்தே கன்னட வெறிக் கும்பலால்தாக்கப்பட்டார். அவரைக் கொல்லவும் முயற்சி நடந்தது. தமிழனான உனக்கு கர்நாடகத்தில் அரசியல் வேண்டிக் கிடக்கிறதாஎன்று கேட்டு அவரை அக் கும்பல் தாக்கியது.
இந்த வன் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரியை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு கர்நாடகத்தின் அரசியலிலும் சமூக அமைப்பிலும் கன்னட வெறியர்கள்தலைதூக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த வெறிக் கும்பல்களை கட்டுப்படுத்த முடியாத கேவலமான அரசு ஆட்சியில் உள்ளது.
தமிழர் என்ற காரணத்தால் பக்தவச்சலத்தின் மீது நடந்துள்ள தாக்குதல் காட்டுத்தனமானது. காவிரிப் பிரச்சனையைச் சொல்லிதமிழர்களைத் தாக்குவது என்பது கர்நாடகத்தில் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், தமிழகத்தில் மக்களும் அரசும் பொறுப்புடன்நடந்து வருகின்றனர். இங்கு கன்னட மக்கள் அமைதியாகவும் பாதுகாப்புடனும் வசித்து வருகின்றனர்.
ஒரு எம்.எல்.ஏவையே சட்டசபையில் வைத்து கன்னட வெறியர்கள் தாக்கியிருக்கிறார்கள் என்றால் கர்நாடகத்தில் வசிக்கும்சாதாரண தமிழர்களின் நிலை என்ன? அவர்களுக்கு கர்நாடக அரசால் என்ன பாதுகாப்பை வழங்கிவிட முடியும்?
பக்தவச்சலத்துக்கு முழுப் பாதுகாப்பு வழங்க வேண்டியது கிருஷ்ணா அரசின் பொறுப்பாகும். கன்னட வெறியர்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பணிந்து தமிழர்கள் மீதான தாக்குதலை வேடிக்கை பார்க்கும் கர்நாடக அரசின செயல் கேவலமானது.
இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-->